Thursday, 19 February 2015

செய்தி


புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

கருப்பூர், டிச.17–

    பெரியார் பல்கலைக்கழக உயிர் வேதியியல் துறை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடங்கி வைத்து துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பேசியதாவது:–
    உலக அளவில் புற்றுநோய் பெரும் சவாலாக உள்ள நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 1.85 மில்லியன் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை நீடித்தால் 2030–ல் இது பன்மடங்கு அதிகரிக்கும் என ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே, இளம் ஆராய்ச்சியாளர்களாகிய மாணவ–மாணவியர் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வினை பொது மக்களிடம் உருவாக்க வேண்டும். மேலும், புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அதற்கான மருந்தினை கண்டறிய வேண்டும். 
     இவ்வாறு அவர் பேசினார்.
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அங்கமுத்து, உயிர் வேதியியல் துறைத் தலைவர் ஜி.சுதா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வை.மஞ்சு, உதவி பேராசிரியர்கள் எம்.சுரியவதனா, எம்.கிருஷ்ணவேணி மற்றும் மாணவ–மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment