Wednesday, 11 February 2015

தமிழ் சீரழிப்பு

இணையதளத்தில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுவதாக தமிழ்
ஆர்வலர்களும்,​​ பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.இன்றைய நவீன உலகில் இணையதளம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது.​எதில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனடியாக எல்லோரும் இணையதளத்தையேநாடுகின்றனர்.தொடக்க காலத்தில் இணையத்தில் ஆங்கிலம் மட்டுமே இருந்தது.​ தமிழ் உள்படபிற மொழிகளை இணையத்தில் காண்பது அரிதாகவே இருந்தது.​ இப்போது தமிழ் உள்படஎந்த மொழியிலும் எழுதுவதற்கும்,​​ படிப்பதற்கும் புதிது புதிதாகமென்பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவும் தமிழில் வரத் தொடங்கியுள்ளது.​அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூட இணையம் மூலம் தேவையான தகவல்களைஅறிந்து கொள்ள முடிகிறது. தமிழில் ஏராளமான இணையதளங்கள் உள்ளன.​ தினமும்பல தளங்கள் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன.​ அரசுத் துறைகள்,​​நிறுவனங்கள்,​​ அரசியல் கட்சிகள்,​​ அமைப்புகள் மட்டுமல்லாது பல தனிநபர்களும் தங்களை இணையதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.சிற்றிதழ்கள் மூலம் தங்களை மெல்ல மெல்ல எழுத்தாளர்களாக வளர்த்துக்கொண்டவர்கள் இன்று இணையதளம் மூலம் வாசகர்களை வலைவீசி பிடித்துவருகின்றனர்.​ எஸ்.​ இராமகிருஷ்ணன்,​​ ஜெயமோகன்,​​ சாரு நிவேதிதா,​​மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் இணையதளங்கள் பிரபலமாக உள்ளன.இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் எழுதுபவர்களால் தமிழ்சீரழிக்கப்படுகிறது என்று பெரும்பாலானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இணையத்தில் ஒரு தகவலைப் பெற விரும்பினால் அனைவரும் கூகுள் தேடு பொறியைநாடுகின்றனர்.​ அதன் மூலம் தேவையான தகவல்களை பெறுகின்றனர்.ஆனால், கூகுள் தேடு-பொறியில் ஏதாவது தமிழ் எழுத்தை தட்டினால் அதுபட்டியலிடும் செய்திகள் 90 சதவீதம் ஆபாசம் நிறைந்தவைகளாக உள்ளன.அம்மா -​ மகன்,​​ அப்பா -​ மகள் போன்ற வார்த்தைகளை இட்டு தேடினால் கூடஆபாசக் கதைகளே வருகின்றன.​ அந்த அளவுக்கு இணையத்தில் தமிழ் ஆபாசக் கதைகள்நிறைந்துள்ளன என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் ஆபாசக் கதைகள் இருந்தாலும் தமிழ் அளவுக்குஇல்லை.​ அப்பா -​ மகள் போன்ற தலைப்புகளில் கூட ஆபாசக் கதைகள் இருப்பதால்அதனைத் தடுக்கவும் வாய்ப்பில்லை.​ இது போன்ற கதைகளை படிப்பதால் இளைஞர்கள்குறிப்பாக மாணவர்கள் ஒருவித மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள்என்கிறார்கள் டாக்டர்கள்.எனவே இது போன்ற விஷயங்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணிக்கவேண்டும்.​ அதுபோல தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் தனி மனிததாக்குதல்களிலும்,​​ மதங்களை இழிவுப்படுத்தி எழுதியும் வருகின்றன.​ பலநேரங்களில் இவர்கள் எழுத்துக்கள் மூலம் மோதி வருகின்றனர்.​ இதனால் சமூகஅமைதி குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே சைபர் கிரைம் போலீசார்இணையத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின்எதிர்பார்ப்பாக உள்ளது.

                                                                           நன்றி.....................


No comments:

Post a Comment